Monday, September 29, 2014

வெற்றிப் பாதை

1. பெரிய விஷயங்களில் ஈடுபாடு

2. மாற்றங்களை உண்டாக்குதல்

3. தோல்வியை சமாளிக்கும் இயல்பு

4. எது முக்கியம் என்ற தெளிவு

5. வாழ்வில் ஒரு நிறைவு

மகாத்மா காந்தியை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது கப்பலோட்டிய சிதம்பரனாரை எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரத்தை நிறுவிய திரு. ஏக்நாத்ரானடே அவர்களை நினைத்துப் பாருங்கள் அல்லது ஒரு பெரிய ஏஜென்சி வியாபாரம் மட்டுமே செய்த பெருந்தொழில் அனுபமில்லாத ஸ்பிக் உரத் தொழிற்சாலையை நிறுவிய எம். ஏ சிதம்பரத்தை எண்ணிப்பாருங்கள்.
இவர்கள் பெரும்பாலும் அதிகம் பேசமாட்டார்கள் ஆனால் உயர்வு பெறுவதற் குரிய எண்ணங்கள் மனதில் ஊறிக் கொண்டிருக்கும்.
அவர்கள் சாதாரண மனிதர்களாக இருக்கலாம். எடுத்த லட்சியமும் அதிலுள்ள ஈடுபாடும் அந்த லட்சியத்தின் கனவும் பெருமையும் இவர்களையும் உயர்த்தி விடுகிறது இதுதான் லட்சியம் தரும் வலிமை.
மனித சமுதாயம் செல்ல வேண்டிய திசையை இவர்கள் சரியாக கணிக்கிறார்கள்.
பலருடைய வாழ்வுமே திட்டமிட்டோ அல்லது எதிர்பாராமலோ மாற்றங்கள் நிகழ்கின்றன.
சாதனை புரிபவர்கள் அந்த மாற்றங்களை விரும்பி வரவேற்று அவற்றைப் பயனுள்ளவை களாக மாற்றிக் கொள்கிறார்கள். தடைக் கல்லைப் படிக்கல்லாகப் பயன்படுத்தி உயர்கிறார்கள்.
தோல்வி இல்லாத வாழ்க்கையே இல்லை. தோல்வி, ஏமாற்றம் எல்லாம் ஏற்படுவது சகஜம்தான்.
ஆனால் தோல்வியை வெற்றி பெற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள். யைக் கண்டவர்கள் தாங்கள் தோற்றதாக அதிகம் கருதுவதில்லை. நாமும் வெற்றி பெற்றவர்களாக மாறலாம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
வெற்றிப் பாதை

Thursday, September 18, 2014

காதலோடு

மழைக்கு மட்டுமே
குடை பிடித்து நடந்தவன்

வெயிலுக்கும் குடை பிடித்து
நடந்தது உன்னோடுதான் !

நிலவுக்காக மட்டுமே
வானத்தை பார்த்து ரசித்தவன்

அம்மாவாசைக்கும் வானத்தை
ரசித்தது உன்னோடுதான் !

அலைகளை ரசிக்க மட்டும்
கடலுக்கு வந்தவன்

அமைதிக்காகவும் கடற்கரை
வந்தது உன்னோடுதான் !

இசைக்காக மட்டுமே குயிலை
ரசித்தவன்

இனிமைக்காகவும் குயிலை
நேசித்தது உன்னோடுதான் !

நான் வீழ்ந்தால் உன்

காதலோடு மட்டும்தான் !!


நான் வாழ்ந்தால் உன்னோடு
மட்டும்தான் !!

காதலித்துப் பார்



உன்னைச் சுற்றி 
ஒளிவட்டம் தோன்றும் 

உலகம் அர்த்தப்படும் 

ராத்திரியின் நீளம் 
விளங்கும் 

உனக்கும் 
கவிதை வரும் 

கையெழுத்து அழகாகும் 

தபால்காரன் 
தெய்வமாவான் 

உன் பிம்பம் விழுந்தே 
கண்ணாடி உடையும் 

கண்ணிரண்டும் 
ஒளிகொள்ளும் 

காதலித்துப் பார் 

*** 

தலையணை நனைப்பாய் 
மூன்றுமுறை பல்துலக்குவாய் 

காத்திருந்தால் 
நிமிஷங்கள் வருஷமென்பாய் 

வந்துவிட்டால் 
வருஷங்கள் நிமிஷமென்பாய் 

காக்கைக்கூட உன்னை 
கவனிக்காது 
ஆனால் – இந்த உலகமே 
உன்னையே கவனிப்பதாய் 
உணர்வாய் 

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் 
உருவமில்லா உருண்டையொன்று 
உருளக் காண்பாய் 

இந்த வானம் இந்த அந்தி 
இந்த பூமி இந்தப் பூக்கள் 
எல்லாம் 
காதலை கௌரவிக்கும் 
ஏற்பாடுகள் என்பாய் 

காதலித்து பார் 

*** 

இருதயம் அடிக்கடி 
இடம்மாறித் துடிக்கும் 

நிசப்த அலைவரிசைகளில் 
உனதுகுரல் மட்டும் 
ஒலிபரப்பாகும் 

உன் நரம்பே நாணேற்றி 
உனக்குள்ளே அம்புவிடும் 

காதலின் திரைச்சீலையைக் 
காமம் கிழிக்கும் 

ஹார்மோன்கள் 
நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும் 
உதடுகள் மட்டும் 
சகாராவாகும் 

தாகங்கள் சமுத்திரமாகும் 

பிறகு 
கண்ணீர்த் துளிக்குள் 
சமுத்திரம் அடங்கும் 

காதலித்துப் பார் 

*** 

பூக்களில் மோதி மோதியே 
உடைந்து போக 
உன்னால் முடியுமா? 

அகிம்சையின் இம்சையை 
அடைந்ததுண்டா? 

உன்னையே உனக்குள்ளே 
புதைக்கத் தெரியுமா? 

சபையில் தனிமையாகவும் 
தனிமையை சபையாக்கவும் 
உன்னால் ஒண்ணுமா? 

அத்வைதம் 
அடைய வேண்டுமா? 

ஐந்தங்குல இடைவெளியில் 
அமிர்தம் இருந்தும் 
பட்டினி கிடந்து பழகியதுண்டா? 

காதலித்துப் பார் 

*** 

சின்னச் சின்னப் பரிசுகளில் 
சிலிர்க்க முடிமே 

அதற்காகவேனும் 

புலன்களை வருத்திப் 
புதுப்பிக்க முடியுமே 

அதற்காகவேனும் 

ஆண் என்ற சொல்லுக்கும் 
பெண் என்ற சொல்லுக்கும் 
அகராதியில் ஏறாத 
அர்த்தங்கள் விளங்குமே 

அதற்காகவேனும் 

வாழ்ந்துகொண்டே 
சாகவும் முடியுமே 
செத்துக் கொண்டே 
வாழவும் முடியுமே 

அதற்காகவேனும் 

காதலித்துப் பார் 

*** 

சம்பிரதாயம் 
சட்டை பிடித்தாலும் 

உறவுகள் 
உயிர்பிழிந்தாலும் 

விழித்துப் பார்க்கையில் 
உன் தெருக்கள் 
களவு போயிருந்தாலும் 

ஒரே ஆணியில் இருவரும் 
சிக்கனச் சிலுவையில் 
அறையப்பட்டாலும் 

நீ நேசிக்கும் 
அவனோ அவளோ 
உன்னை நேசிக்க மறந்தாலும் 

காதலித்துப் பார் 

சொர்க்கம் – நரகம் 
இரண்டில் ஒன்று 
இங்கேயே நிச்சயம் 

காதலித்துப் பார்



வைரமுத்து.

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....