Monday, December 16, 2019

மகள்களை பெற்ற அப்பாகளுக்கு


வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது
அம்மாவா ?
அப்பாவா ?
எனும் ஒர் பெரும் கேள்வி இன்றும் பலரிடத்தில் நம்மால் காண முடியும்
அதை தான் கருவாக கொண்டு விவரிக்கிறது இந்த பதிவு
பதின் பருவ பெண் குழந்தைகளை வளர்த்திட வேண்டியது
தாயா ??
தந்தையா ??
🌻உண்மையில் உங்கள் பதின் பருவ மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் !
உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார்கள் பல அறிஞர்கள் !
🗣தந்தையின் சரியான வழிகாட்டுதல் , அன்பு , அரவணைப்பு இல்லாதது தான் எல்லாவித பிரச்சினைக்கும் மூல காரணம் !
💃ஒரு டீன் ஏஜ் மகளுக்கு , அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு
நண்பன் !
பாதுகாவலன் !
ஊக்கமூட்டுபவர் ! உற்சாகப்படுத்துபவர் ! தன்னம்பிக்கை வளர்ப்பவர் !
நம்பிக்கை ஊட்டுபவர் ! பண்புகளை ஊட்டுபவர் !
#வழிகாட்டி எனும் Protective Guide !
என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்.
ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ?
அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள்.
🗣ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள்.
🗣ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள்.
🌻எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியது அப்பாவின் கடமையாகிறது.
💃சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில் , அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி , பென்சில் , இரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள்.
என எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள்.
💃மகளும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள்.
🌷திடீரென ஒரு நாள் பார்த்தால் , சட்டென்று வளர்ந்து நிற்பாள்.
"என் டாடி சூப்பர் " என்று சொல்லிக் கொண்டிருந்தவள் ,
"டாடிக்கு ஒண்ணும் தெரியாது "என்று பல்டி அடிப்பாள்.
🌷எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல் , மன மாற்றங்கள் தான்.!
🗣என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல.
அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் புலம்பாதீர்கள்,
🌻ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உங்கள் மகள் உங்கள் மகள் தான்
உங்கள் மீதான பாசமும் , அன்பும் , கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும்,
🌻ஆனால் அவளுடைய வெளிப்படுத்தும் வித்த்தில் தான் மாற்றங்கள்
"டாடி பிளீஸ்....டாடி... வாங்கிக் கொடுங்க டாடி "
என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள்
"டாட்....எனக்கு இது வேணும்.
முடியுமா ?!
முடியாதா ?
" என பிடிவாதம் பிடிப்பாள்.
உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள்.
ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள்.
அப்பாவின் அனுமதி இருந்தால்தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி.
🌷நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள்.
💃"நல்லது ன்னா அப்பா ஒத்துப்பார் "
என்னும் நிலமைதான் இருக்க வேண்டுமே தவிர
" அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது "
என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.
🗣பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்க வேண்டும்.
அது தான் முக்கியம்.
🌷ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்
"என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்.."
என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது,
நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்.
🌷இன்னொரு விஷயம் , உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள்.
அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள்.
உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ ,தலையைக் கோதிப்பாராட்டுவதோ ,
செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.
அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள்.
ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள்.
மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது.
நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள்.
💃அவள் பள்ளியிலோ , கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது ,
அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள்.
வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்
🗣நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள்.
சரி ! மதிக்கிறீர்கள்.
சரி ! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறீர்களா ?
இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில்.
டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது.
சுற்றி வளைத்து எதையும் பேசாமல் , உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள் , அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.
💃டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும்.
ஆனந்தம் ,
கவலை ,
எரிச்சல் ,
சோகம்
என எக்கச்சக்க உணர்வுகள் நிரம்பி வழியும்.
சக தோழிகளின் கிண்டல் , படிப்பு , அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது.
அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
"எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்"
என்னும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை !
💃எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள்.
அவள் என்ன தான் மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் சரி , உணர்ச்சி வசப்படாதீர்கள்.
பிரச்சினைகள் –
விபரங்கள் ,
தீர்வுகள் என சிந்தியுங்கள்.
நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும் , ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு.
💃அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம்.
உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.
எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள்
அடிக்கடி உங்கள் மூடு Mood swings மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.
"அப்பா எப்போ அமைதியா இருப்பாரு,எப்போ எரிஞ்சு விழுவாரு ன்னு தெரியாது "
என்னும் நிலமை வந்தால் சிக்கல் தான்.
💃அவளுடைய படிப்பு , நட்பு , எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும்,
"அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை
என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள்.
🗣குறிப்பாக ஆண்களைப் பற்றியும் ,ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள் , எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும்.
சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் அப்பாதான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்.
🌷ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால் , பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும்.
பெண்ணின் திருமண வயது வரும்போது " அப்பா தான் உலகம் "எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும்,
பொறுமையான அணுகு முறையும்,நிபந்தனையற்றை அன்பும் Unconditional Love நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்,
👨‍👩‍👧~சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர்.
"STRONG FATHERS - STRONG DAUGHTERS "
என்னும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார்.
👨‍👩‍👧"என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான் "
எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வர வேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்,
👨‍👩‍👧"என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்"
என உங்கள் மகள் நினைக்க வேண்டும்.
அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்



💃இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு எனது சமர்ப்பணம் ..!!
பெண்குழந்தைகள் ,
நம் வீட்டின்
நம் நாட்டின்
நம் பூகோளத்தின் வரம்
அவரகளை வளர்ப்பது என்பது நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு ,
அதனை வெல்வது நம் கடமை !!தன் மூலம்

Wednesday, December 11, 2019

DHARAPURAM AMARAVTHI SILLAI

தாராபுரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட அமராவதி சிலை மேம்பால பணிகளுக்காக இன்று (10.05.2019) அகற்றப்பட்டது.

Saturday, September 21, 2019

படிக்க பின்பற்ற..

#இதெல்லாம் நாம் மறந்த #நல்லபழக்கங்கள்

அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..(பண்ணவும் நினைக்காதீர் )

முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர் ...

கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ...

பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுஙகள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் ...

பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் ....

நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ...
அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ... அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள் ...

கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள் ...

ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம் ...அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும் ...

டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள் ...
அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம் ...

** நீங்கள் ஓட்டுனராகவோ ,
அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் ...
உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் ...

ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள் ...

நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள் ...அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு , எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள் ...

** முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள் ... 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க ...

** நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல.
(நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

** வயது, சம்பளம் , விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள் ... தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள் ...

** உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள் ...
(no one likes advices.)

** வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள் ...
அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

** புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள் ...எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள் ...
'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள் ...

**
** ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் .
'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

** பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள் ...
உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள் ...

** ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம் ...
9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம் ...
(unless they are your spouse / lovers )
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள் ...
10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம் ...

** ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ,
கோலம் போடும் போதோ , வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள் ...

** பாடல்களை எப்போதும்
இயர் போனிலேயே கேளுங்கள்.
சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள் ...

** ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள் ...
( என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல )

** டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள் ...

** மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள் ...
( இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!)

** ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

** குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள் ...
ஏன் என்று என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்

#நாகரிகங்கள் ....

குறை/ நிறை அனைவரிடமும் உண்டு ...
நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம் ...

Saturday, August 10, 2019

புரிபவர்களுக்கு (ம்) புரியும்

உருவாக்கிய அன்பிற்கும்.,
உருவான அன்பிற்கும்..
இடையேயான
தூரம் கண்டேன்.
மனதால் நொந்து விட்டேன்..
விலக்கக் கண்டேன்..
விளங்கி விட்டேன்..
முற்றிலும் விலகி விட்டேன்...

Sunday, July 28, 2019

மாற்றம்

*மாற்றங்களை* வரவேற்க கற்றுக் கொள்ளுங்கள்...!!
இல்லையேல் அவை உங்களை ஒதுக்கி விட்டு உங்களை தாண்டி முன்னே சென்றுவிடும்......

கோவம்

வெளியே காட்டிய கோபம்
மன்னிப்புக்கு வழி தேடும்..!!

உள்ளே அடக்கிய கோபம்
பழிக்கு வழி தேடும்..!!

புடிச்சா படி

✍கடலில் பெய்யும் மழை பயனற்றது,
பகலி ல் எரியும் தீபம் பயனற்றது,
வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,
நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.


✍வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் நல்லது.

✍ பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது.
 ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளவர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

✍பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது,
சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது,
பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.
பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

✍வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது.
அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.


✍யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,
குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள்.
கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள்.
ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்

✍எல்லாம் காரியங்களிலும் நீங்கள் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.
வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.
காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

Sunday, May 12, 2019

IPL 2019 final

விளையாட்டு
கேட்ச் ட்ராப் v

ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.



ஒன்றரை மாத காலமாக நடந்து வந்த ஐபிஎல் 12வது சீஸன் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் பைனலில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் ஒரு மாற்றமும், சென்னை அணியில் மாற்றம் ஏதும் இல்லாமலும் களமிறங்கின. முதலில் களமிறங்கிய மும்பை அணியின் முக்கிய வீரர்கள் சொதப்ப 20 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பொல்லார்டு 41 ரன்கள் எடுத்தார். சென்னை அணி தரப்பில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடித்த மும்பை அணி 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது

எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு வழக்கம் போல வாட்சன், டூபிளசிஸ் ஓப்பனிங் கொடுத்தனர். வழக்கத்துக்கு மாறான அதிரடியுடன் தொடங்கிய இந்த ஜோடி முதல் மூன்று ஓவர்களில் ஓவருக்கு ஒரு பவுண்டரி என அடித்தது. நான்காவது ஓவரை பிடித்த இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸ் என குர்னால் பாண்டியா ஓவரை வெளுத்து வாங்கினார். ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் அவுட்டும் ஆனார். அதன்பிறகு வந்த ரெய்னா 8 ரன்களுக்கு வெளியேற அம்பதி ராயுடு ஒரு ரன்னுக்கு நடையை கட்டினார். அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சியால் தடுமாறிய சென்னை அணிக்கு கேப்டன் தோனியும் அதிர்ச்சி கொடுக்க தவறவில்லை. ஹர்திக் வீசிய 13வது ஓவரில் இரண்டாவது ரன் எடுக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக தோனி அவுட் ஆக மொத்த டீமும் அதிர்ச்சியில் உறைந்தது. 8 பந்துகள் பிடித்த தோனி 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.



கடைசி கட்ட பரபரப்பு

இதன்பிறகு டீம் அவ்வளவு தான் என நினைத்தபோது தான் பிராவோவுடன் சேர்ந்து தனது அதிரடியை காட்டினார் வாட்சன். சீரான இடைவெளியில் பவுண்டரி, சிக்ஸர் என மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த அவர், குர்னால் பாண்டியா வீசிய 18வது ஓவரில் மட்டும் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அதகளம் செய்தார் செய்தார். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 18.2வது பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பிராவோ வெளியேறினார். அடுத்ததடுத்த பந்துகளில் நான்கு ரன்கள் எடுக்க அந்த ஓவரின் கடைசி பந்தில் எக்ஸ்ட்ரா மூலமாக நான்கு ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி ஆறு பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மலிங்கா பந்துவீசினார்.

கேட்ச் ட்ராப் vs டைரக்ட் ஹிட்ஸ்; கடைசி பந்து வரை திக் திக்... 4-வது முறையாக ஐபிஎல் சாம்பியனான மும்பை!#MIvCSK
41 minute's ago
`எம்.ஜி.ஆர்கூட தன்னை அழகன் எனச் சொன்னதில்லை!' - ஸ்டாலினைக் கிண்டல் செய்யும் எடப்பாடியின் சர்ச்சைப் பேச்சு
2 hour's ago
'அயோக்யா' என்னுடைய கதை?! - பார்த்திபன் பரபரப்பு குற்றச்சாட்டு
8 hour's ago


முதல் இரு பந்துகளில் வாட்சனும், ஜடேஜாவும் தலா ஒரு ரன்கள் எடுத்தனர். மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த வாட்சன், அடுத்த பந்தில் மீண்டும் இரண்டு ரன்கள் எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரண்டு பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷர்துல் தாகூர் களமிறங்கினார். ஐந்தாவது பந்தை மலிங்கா புல்டாசாக வீச அதில் இரண்டு ரன்கள் எடுத்தனர். கடைசி ஒரு பாலுக்கு இரண்டு ரன்கள் தேவை என்ற போது மலிங்காவின் யார்க்கர் பந்தில் ஷர்துல் தாகூர் எல்பிடபிள்யூ மூலம் அவுட் ஆக ஒரு ரன்னில் சென்னை அணி கோப்பையை நழுவவிட்டது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது.

Wednesday, May 8, 2019

உண்மை..

இயலாதவன் கையில் எடுக்கும்
இறுதி ஆயுதமே " *விமர்சனம்* ".!!


இயன்றவன் அதை தடுக்க
ஏந்திடும் ஆயுதமே " *புன்னகை* "..!!

நமக்காக..

₹ ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்....

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை

₹ பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...
ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!

₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...

₹ நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....

₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....

₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மனஅமைதியையும் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை

₹ இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ....
அதற்கும் ... "ஏன்" என்று தான் கேட்பாள் இந்த பெண் .

₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...
இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...
15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

₹ வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

₹ வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...

₹மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் ...
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...

₹ எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....

₹ இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் ...
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...

₹ பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

₹ தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!

₹ சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து
 உனை_சீரழிக்கும் துரோகியை_விட ...
 முறைத்துக்_கொண்டே - உன் முன்னிருக்கும்
எதிரி_மேலானவன் !.....

₹ அவ்வளவுஎளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில் கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

₹ உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..

₹ அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை...

₹பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........

₹ நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை மூடிக்கொள்வது
மிகச் சிறந்தது......

£ வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

£ புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
 மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
 எல்லா "பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!

£ அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....

£ வாழ்வோடு போராடிச் சாவதிலும்
சாவோடு போராடி வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!

Saturday, May 4, 2019

unthinkable becomes acheivable

வானமே எல்லை என்று இப்போது யாரும் சொல்வதில்லைஆகாயமேஉன் எல்லைகளை அகலப் படுத்து என்று கூறும் கால கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்சுருங்கி விட்ட உலகில் விரிந்து விட்டது மனிதனின்சிந்தனை வீச்சும் செயல் வேகமும்.
ஒரு அலுவலகத்தில் எழுதி வைத்திருந்த வாசகம் பூரணத்துவம் எங்கள் நோக்கம் சிறப்பானவைகளைபொறுத்துக் கொள்வோம் செயல்பாடுகளும் அதன் விளைவுகளும் அசாதாரணமாக இருக்க வேண்டும்என்பதில் எப்படிப்பட்ட ஈர்ப்பும்ஈடுபாடும் என்று பாருங்கள்தரம் என்பது பொருட்களுக்கும்சேவைகளுக்கும் மட்டும் தான் என்று அர்த்தமில்லைஒவ்வொரு தனி மனிதனுக்கும் அது பொருந்தும்.
மனிதனின் சிந்தனைகளும் செயல்களும் தரமிக்கவையாக இருக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துஇருக்க முடியாதுவிழிப்புணர்வும்விடாமுயற்சியும் ஒருவனை தரமான மனிதனாக மாற்றும்தரம் என்பதுஒரு நடவடிக்கையை மட்டும் குறிக்காதுஅது கலாசாரத்தின் வெளிப்பாடு.
அசாதாரணமானவர்கள் தான் அசாதாரமான சாதனைகள் செய்ய முடியும் என்பதில்லைசாதாரணமானவர்களும்அசாதாரணமான நிகழ்வுகளை நிகழ்த்த முடியும்நம்மால் முடியும் என்ற திடமானநம்பிக்கையும் திட்டமிட்ட செயல்பாடும் இருந்தால் நினைத்துப் பார்க்க முடியாதவைகளை நடத்திக் காட்டமுடியும் (unthinkable becomes achievable). நாம் நேற்று எப்படி இருந்தோம்இன்று எப்படி இருக்கிறோம்என்பதைப் பொறுத்ததல்லநாளை எப்படியிருக்க முடியும் என்பதுகம்பளிப்பூச்சியில் அதுவண்ணத்துப்பூச்சியாக மாறப் போவதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லைஎதிர்கால வெற்றிகளால்கடந்தகால தோல்விகளை கதிகலங்கச் செய்ய முடியும்.
இன்றைய உலகம் நமக்கு சொல்லித் தரும் பாடம் என்னவென்றால் எதிர்பாராததை எதிர்பாருங்கள், (expect the unexpected) மாற்றங்கள் மலிந்து விட்ட உலகம்அதனால் ஏற்படும் வாய்ப்புகளும் சவால்களும் ஏராளம்மாற்றங்களை சரிவர புரிந்து கொண்டு அவைகளை வரவேற்று ஏற்றுக் கொண்டு சவால்களைசாதனைகளாக மாற்றி காட்ட இன்றைய இளைஞர்கள் தயாராக வேண்டும்.
தொடர்ச்சியான சாதனைகளும்முன்னேற்றங்களும் நம் வாழ்க்கைக்கு வாழ்வு (life to life) கொடுக்கும்ஜப்பானியர்களின் வெற்றியின் ரகசியமே தொடர்ச்சியான மேம்பாடு தான் (continual improvement) வாழ்க்கையில் ஒன்றிரண்டு வெற்றிகளைப் பெற்று விட்டு நீண்ட காலம் ஓய்வெடுப்பது விவேகம் ஆகாதுநமது நேற்றைய சாதனை இன்றும் மிக பெரிதாக தெரியுமானால் இன்று நாம் ஒன்றும் செய்யவில்லைஎன்று தான் அர்த்தம். (if our past achievement still look great, we have done nothing today). கடந்த கால சாதனைகளைநாம் இன்றும் கொண்டாடிக் கொண்டிருந்தால் திருப்திகரமான இயலாமை (satisfactory underperformance) நம்மிடம் குடிகொண்டு விடும்.
சந்தோஷம் என்பது சின்ன சின்ன விஷயங்களில் உள்ளதுவெற்றி என்பது பெரிய பெரிய சாதனைகளில்உள்ளதுமனித சக்தியையும்நேரத்தையும் சரியான திசையில் முதலீடு செய்யும் போது சந்தோஷமும்வெற்றியும் ஒருசேர வந்தடையும் இளைஞர்கள் வாழ்வில் வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றனஅவைகளைஅடையாளம் கண்டு ஆர்வத்தோடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சாதனைகள் படைக்க முயலும் போது பல சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்தடைகள் பலஉருவாகலாம்சுய ஊக்கத்தின் (self motivation) துணையோடு அவற்றை எதிர்கொள்ள வேண்டும்ஊக்கம்என்பது மனதுக்கு கொடுக்கும் சத்துணவு (Mental Nutrition). துறைமுகத்தில் நிற்கும் கப்பல் பாதுகாப்பாக தான்இருக்கும்ஆனால் கப்பல்கள் அதற்காக கட்டப்பட்டவை அல்லவாழ்க்கைப் பயணத்தில் எதிர்நீச்சல்போட்டு தான் வெற்றிவாகை சூட முடியும்.
இன்று என்பது நாம் நேற்றுப் பார்த்து பயந்த நாளை தான்இன்று நன்றாகத் தான் இருக்கிறோம்.
பயந்தபடிவருத்தப்பட்டபடி விபரீதமாக எதுவும் நடக்கவில்லை என்ற நம்பிக்கை நம்மிடையே வளர்த்துக்கொள்ள வேண்டும்அசைக்க முடியாத நம்பிக்கையோடு வாழ்வை எதிர்நோக்கினால் சிக்கல்களும்சிறகாகும்நாம் விரும்பும் வண்ணம் நம் வாழ்வை உருவாக்கலாம் என்பதை வண்ணத்துப்பூச்சி நமக்குஞாபகப்படுத்தி கொண்டே இருக்கட்டும்.

- டாக்டர் கே.ஜாபர் அலி

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....