Friday, September 28, 2012

கனவு



கனவு 

ஆஹா !...என் இந்திய தேசமா இது ?

1 ரூபாய் = 48 .83 டாலர் ,
கல்வி பயில வரும் ஆஸ்திரேலியர்கள்,
ஜனநாயகம் அறிய வரும் இங்லாந்து அறிஞர்கள் ,
நடப்புத் தொழில்நுட்பம் இது தானே
என ஐயமிடும் ஜப்பானியர்கள் ,
எங்களுக்கும் பயிற்சி தாருங்கள்
என்று வரும் சீன விளையாட்டு வீரர்கள் ,

நாட்டு நலனை பற்றிய இணைய அரட்டைகள் ,
பள்ளி கல்லூரி உணவகத்தில் பாடப் பேச்சு ,
தியேட்டருக்கு பதில் நுலகங்கள் ,
வசீகரப் பேச்சிற்கு முதலீடு செய்யாத மக்கள் ,
தன் கையே தனக்கு உதவி என
அரசாங்க பணிக்கு காத்திராத என் இளைய சமுகம்
விவசாயம் செய்ய வரும் என்னருமை தோழர்கள் ,

24 மணி நேர மின்சார வசதி,
356 நாட்களும் குடிநீர் சேவை ,
தட்டுப்பாடில சிலிண்டர் ,
விலை ஏறா பெட்ரோல் டிசல்,
புதுப்பிக்கவல்ல எரி சக்தி வளங்கள் ,

லஞ்சமில்லா அரசு அலுவலகங்கள் ,
ஊழலற்ற நல்லாட்சி ,

எங்கும் வளமை,
எதிலும் செழுமை ,
தரணியெங்கும் இந்தியன் பெருமை .....

காத்திருக்கிறேன்
என் கனவும் நனவாகும் என்று.....

(பளிக்கும் கனவா ? இல்லை பகல் கனவா ?)


தாராபுரம் சதீஸ்


Thursday, September 27, 2012

என் ஊர்



ன் ஊர் 
அழகான நதிக்கரை ,
அதனையொட்டி
தென்றல் காற்றை தனக்கே சொந்தம் எனும்
தென்னத் தோப்பு..
வளமையை வெளிக் காட்டும் வாழை மரங்கள் ,
நன்செய் நிலங்கள் ,(நன்செய் பாளையம் )
உலகிற்கு உணவு தரும் நெற்பயிர்கள் ,
அதில் நீர் பாய்ச்சும் என் விவசாயி,
அருள் தரும் காளியம்மன் ஆலயம் ,
கோட்டை மதிற்சுவர் போன்ற என் ஊர் சுவர்கள் ,
அனைவரும் ஒரு கூட்டு பறவைகள் எனும்
வகையில் அமைந்த மாடி வீடுகள் குடிசை வீடுகள் ,
அதனை தாண்டி சென்றால்
உலகிற்கு அறிவியல் தந்த
'
புல்லின் மேல் பனித் துளி ',
அதனை மேயும் ஆடுகள் ,
அதனை பராமரிக்கும் என்னூர் உழைப்பாழி
மானம் காக்கும் ஆடைகளை தரும்
பருத்தித் தோட்டங்கள்,
அதனையடுத்து
சோழக் பயிர்கள்
கதிரை கொத்தும் கிளிகள் ,
அதனை விரட்டும் என்னூர் முதியவர்
இன்னும் சென்றால்
கம்புப் பயிர்கள்


சொல்லிக் கொண்டே போகலாம்
வேரோன்றுமில்லை
இது என் அழகான சிற்றுர் ....
(
நன்செய்பாளையம் ,தாராபுரம் )

உன்னால் முடியும் தோழா ....!



உன்னால் முடியும் தோழா ....! 
தோழா !
உன்னால் முடியும்..

சாதியென்றும் மதங்களேன்றும்
சண்டையிட்டு நம்மை சமய வெறியனாக்கிய
சதிகாரக் கூட்டத்தை தகர்த்தெரிய
உன்னால் முடியும் தோழா.. !


நல்லாட்சி நல்லாட்சி என்று
நம்மையும் நாட்டையும் நாசமாக்கிய
நய வஞ்சகரை நசுக்கிட
உன்னால் முடியும் தோழா.. !

உழைப்பாளி உழைப்பாளி என்று பேசி
உழைப்பை உறுஞ்சி உடல் வளர்கும்
பதர்களை அழித்திட
உன்னால் முடியும் தோழா.. !

இன்று ஆறுதல் வார்த்தை கூற
ஒரு உதடு கூட இல்லையா ?
நாளை உறுதுயரம் உனக்கென்றால்
உடம்பனைத்தும் வாயாகக் கதறி அழ வைக்க
உன்னால் முடியும் தோழா.. !

உன்னுள் ஆயிரமாயிரம் திறமைகள்
ஒளிந்து கிடக்கின்றனவா ?
வெளிக் காட்ட வாய்ப்பில்லையா ?
சோர்ந்து கிடக்கிறாயா நீ ?

சோர்ந்து விடாதே ......

" வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால்
ஓடுவதில்லை " என்ற வரிகளை

மனதில் வையடா ...
சிலிரித்து நில்லடா ....!

ஐவர் குல விளக்காம் பாஞ்சாலி தனை
துரியோதனன் துகிலுரித்த காலம் போய்
இன்று என் நாட்டு கன்னியரின் கற்பை
கணினியில் விலை பேசும் நாய் பிழைப்பை
நசுக்கி கொன்றிட
உன்னால் முடியும் தோழா.. !

அதற்காக தோழனே .

"நீ ஆற்றும் கடமையை மறவாதே.,
புயல் காற்றுக்கும் மழைக்கும் தயங்காதே..
போற்றும் இதயங்கள் போற்றட்டுமே
பொறுமை இல்லாதோர் துற்றட்டுமே " என்று

நீ வாழடா ....
எல்லாம் முடியுமே தோழானே உன்னால்....!



எழுதியவர் :தாராபுரம் சதீஸ்



நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....